பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,000 கன அடியாக அதிகரிப்பு!
05:31 PM Jul 15, 2024 IST
Share
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1,000 கன அடி, கபினி அணையில் இருந்து 25,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட உபரிநீர் பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.