வருமான வரியை திரும்பப் பெறுவதற்கு ஏற்படும் தாமதத்துக்கான காரணம் குறித்து ஒன்றிய அரசு விளக்கம்
டெல்லி: வருமான வரியை திரும்பப் பெறுவதற்கு ஏற்படும் தாமதத்துக்கான காரணம் குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. வருமான வரி திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வருமான வரித்துறை சில ITR refund கோரிக்கைகளை ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளது. குறிப்பாக, அதிக மதிப்புள்ளவை எனக் கருதப்படும் அல்லது குறிப்பிட்ட சலுகைகளைக் கோரும் சந்தேகத்திற்குரியதாகக் குறிக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வால் பணத்தைத் திரும்பப் பெறுவதில் தற்காலிக தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், சட்டபூர்வமான தொகைகள் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏதேனும் தவறுகளைச் சரிசெய்ய வரி செலுத்துவோர் திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளோம், என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
குறைந்த மதிப்புள்ள கோரிக்கைகளுக்கான பணத்தைத் திரும்பப் பெறுதல் ஏற்கனவே வழங்கப்பட்டு வருவதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. குறைந்த மதிப்புள்ள தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சில தவறான கோரிக்கைகள் அல்லது சலுகைகள் கோரப்பட்டதைக் கண்டறிந்துள்ளோம். இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. அதனால் அவரை ரெட் ஃபிளாக் செய்துள்ளோம். அதை ஆய்வு செய்த பின்பே கொடுப்போம் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மீதமுள்ள பணத்தைத் திரும்பப் பெறுதல்கள் இம்மாதம் அல்லது டிசம்பருக்குள் வெளியிடப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதிகாரபூர்வ தரவுகளின்படி, ஏப்ரல் 1 முதல் நவம்பர் 10 வரை வழங்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுதல் சுமார் 18 சதவீதம் குறைந்து ரூ. 2.42 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது.
வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 244A இன் படி, வரி செலுத்துவோருக்கு ஏதேனும் தொகை திரும்பப்பெறப்பட வேண்டியிருந்தால், ஒவ்வொரு மாதத்திற்கும் அல்லது மாதத்தின் பகுதிக்கும் 0.5% எளிய வட்டிக்கு அவர் தகுதியுடையவர். விண்ணப்பங்களில் பிடித்தம் அல்லது திரும்பப் பெறக் கோரிய தொகை வழக்கத்துக்கு மாறாக அதிகமாக உள்ளது.
வழக்கத்துக்கு மாறாக உள்ள விண்ணப்பங்கள், தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த தொகையுடைய வரி திரும்பப் பெறக் கோரிய விண்ணப்பங்கள் தாமதமின்றி பரிசீலனை செய்யப்படும். ஆய்வின்போது விண்ணப்பங்களின் பல தவறுகள் கண்டறியப்பட்டுள்ளன. வரி திரும்பப் பெறக் கோரிய விண்ணப்பங்களை இம்மாத இறுதி டிசம்பரில் முடிக்க திட்டம். ஏப்.1 முதல் நவ.10 வரை வருமான வரியை திரும்பப் பெறக் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் 18% வீழ்ச்சி அடைந்துள்ளது.