தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு சிபிஐ கோர்ட்டில் ஜெகன்மோகன் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஆஜர்

திருமலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி நேற்று சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார். 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஆஜரானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  ஆந்திராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் முதல்வர் பதவியை இழந்த ஜெகன்மோகன்ரெட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரு, தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அல்லது ஆந்திர மாநிலம் தாடேப்பள்ளியில் உள்ள சொகுசு பங்களாவில் மாறிமாறி தங்கி வருகிறார்.

Advertisement

இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சில ஆண்டுகளுக்கு முன் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக நாம்பள்ளி சி.பி.ஐ. கோர்ட்டில் அவர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பேரில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றத்தில் நேற்று ஜெகன்மோகன் ஆஜரானார். அவரது வருகை குறித்து அறிந்த ஆதரவாளர்கள் கோர்ட் வளாகத்தில் திரண்டிருந்தனர்.

இதனையொட்டி முன்கூட்டியே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஜெகன்மோகன் ஆதரவாளர்களை கோர்ட்டிற்குள் நுழையாதவாறு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக ஜெகன்மோகன் வரும் பாதையில் நடிகர் அல்லுஅர்ஜுன் நடித்த `புஷ்பா 2’ படத்தில் வரும் `ரெப்பா ரெப்பா’ என்ற வசனத்துடன் கூடிய ப்ளெக்ஸ் பேனர்களை வைத்திருந்தனர்.

அதில் வரும் 2029ல் ‘ரெப்பா ரெப்பா’ என குறிப்பிட்டிருந்தனர். ஜெகன்மோகனுடன் ஏராளமான தொண்டர்கள் மற்றும் சில போலீசாரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜரான ஜெகன்மோகன் ரெட்டி, அங்குள்ள வருகை பதிவில் கையெழுத்திட்டார். தொடர்ந்து அங்கிருந்து தனிவிமானம் மூலம் தாடேப்பள்ளிக்கு சென்றார்.

Advertisement