பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு
08:33 AM Aug 14, 2025 IST
சிவகாசி: பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம், ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு உற்பத்தியாளர்களின் அலுவலகங்கள், வீடுகள், கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் 3 நாட்கள் சோதனை நடைபெற்றது.