தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இடைவிடாமல் போராடும் ராணுவம் ஜம்முவில் பரவும் தீவிரவாதம் 10ல் 8 மாவட்டத்தில் தாக்குதல்: 18 பாதுகாப்பு படையினர் உட்பட 44 பேர் பலி

Advertisement

ஜம்மு: ஜம்முவில் கடந்த ஓராண்டில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அங்குள்ள 10ல் 8 மாவட்டங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் 18 பாதுகாப்பு படையினர், 13 தீவிரவாதிகள் உட்பட 44 பேர் பலியாகி உள்ளனர். ஜம்மு பிராந்தியத்தில் கடந்த 10 ஆண்டாக தீவிரவாத சம்பவங்கள் முழுக்க கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த 2021 முதல் மீண்டும் தாக்குதல்கள் தலைதூக்கத் தொடங்கின. குறிப்பாக, ராணுவ வீரர்கள் வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

குறிப்பாக ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் 2021 அக்டோபருக்குப் பிறகு நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 47 பாதுகாப்பு படையினர், 48 தீவிரவாதிகள், 7 பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், கடந்த ஓராண்டாக ரஜோரி, பூஞ்ச் மட்டுமின்றி ஜம்முவின் மற்ற 6 மாவட்டங்களிலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது. கடந்த ஏப்ரல்-மே மாதம் முதல் ரியாசி, தோடா, கிஷ்த்வார், கதுவா, உதம்பூர் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில் நடந்த தொடர் தீவிரவாத சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தி உள்ளன.

ஜம்மு பிராந்தியதில் மொத்தமுள்ள 10 மாவட்டங்களில் 8ல் தீவிரவாத சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதில், 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 18 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்துள்ளனர். இவர்கள் உட்பட மொத்தம் 44 பேர் தீவிரவாதத்திற்கு பலியாகி உள்ளனர். அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த ஆண்டு தோடா, கதுவா, ரியாசி மாவட்டங்களில் தலா 9 பேரும், கிஷ்த்வாரில் 5, உதம்பூரில் 4, ஜம்மு மற்றும் ரஜோரியில் தலா 3 பேரும், பூஞ்ச் மாவட்டத்தில் 2 பேரும் பலியாகி உள்ளனர்.

Advertisement

Related News