தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.173 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

 

Advertisement

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.173 கோடி செலவிலான மருத்துவக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தும், ரூ.20.15 கோடியில் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். கடந்த 2021-22ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையில், வேலுார் மாவட்டம் காட்பாடியில் 60 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, காட்பாடியில் ரூ.14.30 கோடி செலவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதுபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.173.81 கோடி செலவிலான மருத்துவக் கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, ரூ.20.15 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் மருந்துக் கட்டுப்பாடு இயக்கத்திற்கு ரூ.14 கோடியே 85 லட்சம் தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் - வாலாஜாபாத் வட்டம், ஊத்துக்காட்டில் ரூ.75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உதவி மருந்துக் கட்டுப்பாடு இயக்குநர் அலுவலகக் கட்டிடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் சார்பில் மொத்தம் ரூ.6 கோடியே 22 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் சார்பில் சென்னை - அரும்பாக்கம், அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைக் கட்டிடம் மற்றும் சென்னை - அரும்பாக்கம், அரசு யுனானி மருத்துவக் கல்லூரியை மேம்படுத்திட புதிய கட்டிடம் என மொத்தம் ரூ.20 கோடியே 15 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களுக்கு முதல்வர் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார், மருந்து கட்டுப்பாடு இயக்குநர் (பொறுப்பு) லால்வேனா, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையர் எம்.விஜயலட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement