தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மருமகளுடன் தகாத உறவு கண்டித்த மாமனார் கொலை: பெரியப்பா மகன் வெறிச்செயல்

சேந்தமங்கலம்: கொல்லிமலை அருகே, மருமகளுடனான தகாத உறவை கைவிடும்படி கூறிய விவசாயியை, உறவினர் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் சேலூர்நாடு ஊராட்சி பள்ளக்குழிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கசாப்பு செல்வராஜ் (55). இவரது மகன் விஜயகுமார். இவர்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். செல்வராஜ் வீட்டிற்கு, அவரது பெரியப்பா மகன் காசி துரைசாமி (48) அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

Advertisement

அப்போது, விஜயகுமாரின் மனைவி சந்திராவுக்கும், காசி துரைசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதை விஜயகுமார் அறிந்து தந்தை செல்வராஜிடம் தெரிவித்துள்ளார். மகனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த செல்வராஜ், காசி துரைசாமியை கண்டித்துள்ளார். தனது மருமகளுடன் தகாத உறவை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால், அவர் உறவை தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, செல்வராஜ் பள்ளக்குழிப்பட்டி அருகே குழிக்காடு டிரான்ஸ்பார்மர் அருகே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, போதையில் அந்த பக்கமாக வந்த காசி துரைசாமியை அழைத்து, மருமகளுடன் வைத்துள்ள தகாத உறவை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், கைகலப்பாக மாறியது.

அப்போது, காசி துரைசாமி அங்கிருந்த விறகு கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்கு பதிந்து காசி துரைசாமியை கைது செய்தனர். இவரது மனைவி குடும்பத் தகராறில் பிரிந்து சென்று விட்டார். தனியாக வசித்து வந்த காசி துரைசாமி, அண்ணன் என்ற முறையில் அடிக்கடி செல்வராஜ் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுள்ளார். அப்போது, சந்திராவுடன் ஏற்பட்ட பழக்கம், செல்வராஜ் கொலையில் முடிந்துள்ளது.

Advertisement