தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக பெண் டாக்டர் வீடு உள்பட 5 இடங்களில் சோதனை: சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக சென்னையில் பெண் டாக்டர், தொழிலதிபர் வீடு உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை அடையாறு காந்தி நகரை சேர்ந்தவர் இந்திரா. டாக்டரான இவர் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து, நேற்று காலை டாக்டர் இந்திரா வீட்டிற்கு ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுடன் காரில் வந்த 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல் வேளச்சேரி குல்மேகர் அவென்யூ பகுதியில் வசித்து வரும் தொழிலதிபர் பிஷ்னோய் என்பவர் வீடு, மேலும், மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது வீடு என மொத்தம் 5 இடங்களில் நேற்று நள்ளிரவு வரை சோதனை நடந்தது.

Advertisement

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடந்த டாக்டர் மற்றும் தொழிலதிபர்களுக்கு அரியானா வழக்கில் தொடர்பு இருப்பதும், அதன் தொடர்ச்சியதாக இந்த சோதனை நடந்ததாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் வழக்கு தொடர்பான சில முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான வங்கி கணக்கு விவரங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். சோதனை முடிந்த பிறகுதான் இதுதொடர்பான முழு விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement