தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்காதலனுடன் ரீல்ஸ் போட்டதை தட்டிக்கேட்டதால் கணவரை கொன்று தூக்கிலிட்டு நாடகமாடிய காதல் மனைவி கைது: உடந்தையாக இருந்த தாயும் சிக்கினார்

சேத்துப்பட்டு: கள்ளக்காதலனுடன் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டதை தட்டிக்கேட்ட கணவரை கொன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதுபோல் நாடகமாடிய மனைவி, மாமியாரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(27), லாரி டிரைவர். இவரது மனைவி ஷர்மிளா(25). இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஹன்சிகா(4) என்ற மகளும், ஆஜீஸ்(3) என்ற மகனும் உள்ளனர். விஜய் டிரைவர் வேலை செய்து வருவதால் 10 முதல் 15 நாட்கள் என தொடர்ச்சியாக வெளியூர்களுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வருவாராம். இதனால் விஜய், அவரது மனைவி ஷர்மிளாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரிப்பாராம்.

Advertisement

அக்கம்பக்கத்தினரும் வீட்டிற்கு யாரோ ஒருவர் அடிக்கடி வந்துசெல்வதாக கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஷர்மிளா அடிக்கடி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் வசிக்கும் தாய் ராணிபாத்திமா வீட்டிற்கு சென்றுவிடுவாராம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு நடத்தை சந்தேகம் காரணமாக மீண்டும் தம்பதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது விஜய், ஷர்மிளாவை சரமாரி தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ராணிபாத்திமா, விஜய்யை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டதாக அக்கம்பக்கத்தினர் மற்றும் விஜய்யின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் விஜய்யின் சாவில் சந்தேகம் உள்ளதாக சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ஷர்மிளா, ராணிபாத்திமா இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், ஷர்மிளா கள்ளக்காதலனுடன் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டுள்ளாராம். இதை பார்த்த விஜய் அவரது மனைவியை கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஷர்மிளா, ராணிபாத்திமா இருவரும் சேர்ந்து விஜய்யை உருட்டு கட்டையாலும், கம்பியாலும் சரமாரி தாக்கி அவரது கழுத்தை கயிற்றால் கட்டி, ஜன்னல் கம்பியில் இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதை மறைப்பதற்காக கொலை செய்யப்பட்ட விஜய் ஜன்னலில் தூக்குமாட்டி இறந்ததுபோல் சித்தரித்து நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து ஷர்மிளா, ராணிபாத்திமா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Related News