தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டவிரோத இரும்புத்தாது ஏற்றுமதி கர்நாடக காங். எம்எல்ஏவின் ரூ.21 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

பெங்களூரு: உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பெலகேரி துறைமுகத்திலிருந்து சுமார் 7.23 லட்சம் டன் இரும்புத்தாதுவை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கார்வார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சதீஷ் கிருஷ்ணா சைல் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கர்நாடகா, கோவா, மும்பை, டெல்லி ஆகிய மாநிலங்களில் சதீஷ் சைலுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.41 கோடி ரொக்கம், 6.75 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் சதீஷ் சைல் கைது செய்யப்பட்டார். தற்போது அமலாக்கத்துறை, ரூ.21 கோடி மதிப்புடைய அவரது சொத்துகளை முடக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Related News