சட்ட விரோத சூதாட்ட செயலி வழக்கு மாஜி பெண் எம்பியிடம் அமலாக்க அதிகாரிகள் விசாரணை
புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலிகள் ஏராளமான முதலீட்டாளர்களின் கோடிக் கணக்கான பணத்தை மோசடி செய்ததுடன் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 1xBet நிறுவனத்துக்கு எதிரான பண மோசடி வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா,ஷிகர் தவான் ஆகியோரிடம் அமலாக்கத் துறை ஏற்கெனவே விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜராகுமாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாஜி எம்பியும் நடிகையுமான மிமி சக்ரவர்த்திக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மிமி சக்ரவர்த்தி (36) நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.