தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிம்பொனி இசையமைத்த இளையராஜாவுக்கு மாநிலங்களவை பாராட்டு

புதுடெல்லி: லண்டனில் ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து ‘வேலியண்ட்’ என்ற தலைப்பில் ஒரு முழு ஆங்கில கிளாசிக்கல் சிம்பொனி இசையை இளையராஜா இசையமைத்து விட்டு நாடு திரும்பினார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். சிம்பொனி இசையமைத்த பிறகு நேற்று முதல்முறையாக மாநிலங்களவை கூட்டத்தில் இளையராஜா கலந்து கொண்டார். அவரை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பாராட்டினார்.
Advertisement

அவர் கூறுகையில்,’ சிம்பொனி இசையமைத்த முதல் இந்தியர் இளையராஜா என்று பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பாரம்பரியம் தொடர்ந்து உலகை கவர்ந்திழுக்கட்டும். 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் இசையமைக்கும் ஒரு பழம்பெரும் இசையமைப்பாளர் இளையராஜா. அவர் ஒரு இசைஞானி, ஒரு இசை மேதை. அவர் இசையமைத்த பாடல்கள் இசை உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவை. இவை இதயத்தின் ஆழமாக உணரப்பட்ட உணர்வுகள். அவர் 8,600 பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார், மேலும் 1,523 திரைப்படங்களுக்கு இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் ஆவார். ஒன்பது மொழிகளுக்கும் மேல் அவர் இசைப்பணியாற்றி உள்ளார். 5 தேசிய திரைப்பட விருதுகளும் பெற்றுள்ளார்’ என்றார். அப்போது சமாஜ்வாடி கட்சி எம்பி ஜெயா பச்சன் கூறுகையில்,’இளையராஜாவுடன் நிறைய நேரம் செலவழிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது’ என்றார்.

Advertisement