தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை ஐஐடியில் இன்வென்டிவ் கண்காட்சி: 28ம் தேதி தொடக்கம்

சென்னை: சென்னை ஐஐடி,‘‘இன்வென்டிவ் (IInvenTiv) 2025’’ என்ற இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக் கண்காட்சியை பிப்ரவரி 28ம் தேதி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைக்கிறார். மத்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் என்ஐஆர்எப் தரவரிசையில் இடம்பெற்றுள்ள ஐஐடி-கல்வி நிறுவனங்கள் என்ஐடி-க்கள், ஐஐஎஸ்இஆர்-கள் மற்றும் என்ஐஆர்எப் தரவரிசையில் இடம்பெற்ற 50 முதன்மைக் கல்வி நிறுவனங்களின் புத்தம்புது கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.
Advertisement

இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியதாவது: விக்சித் பாரத்-2047ல் இந்திய தொழில்நுட்பத்திலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் முன்னோடி நிலையை அடையும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தவும், தாங்கள் தொழில் ஊக்குவிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப பரிமாற்றங்கள், சந்தைக்கான ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் இன்வென்டிவ் ஒரு தளமாக அமைந்துள்ளது. இந்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிப்ரவரி 28 ந் தேதி ஐஐடி வளாகத்தில் முன்னணித் தொழில்துறையினர், கல்வியாளர்கள் முன்னிலையில் இன்வென்டிவ் 2025 ஐத் தொடங்கி வைக்கவிருக்கிறார்.

பங்கேற்கும் கல்வி நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தும் வகையில் பல்வேறு 183 அரங்குகள், கருப்பொருள்கள் தொடர்பான உரைகள், குழு விவாதங்கள் என இந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. மிராக்கிள் ஆன் வீல்ஸ் என்கின்ற மாற்றுத் திறனாளிகளின் பிரமாண்ட கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கல்வி நிறுவனத்திற்கு 8 ஸ்டால்கல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 262 கண்டுபிடிப்புகள் விண்ணப்பம் செய்ததில் 183 கண்டுபிடிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சென்னை ஐஐடி கடந்தாண்டு 400 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. இந்த ஆண்டும் 400 கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. வளர்ந்து வரும் விமான போக்குவரத்து தேவைக்கேற்பவும்., நிலையான நீடித்த வளர்ச்சி எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகள் அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.

Advertisement

Related News