தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோப்பை வேண்டுமெனில் ஏசிசி அலுவலகத்திற்கு வாருங்கள்; பிசிசிஐயிடம் மன்னிப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை: பாகிஸ்தான் அமைச்சர் அடாவடி

துபாய்: 17வது ஆசிய கோப்பை டி.20தொடரில் துபாயில் கடந்த 28ம் தேதி நடந்த பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோஷின் நக்வியிடம் இருந்து இந்தியா கோப்பையை பெற மறுத்துவிட்டது. இதனால் அவர் சாம்பியன் கோப்பையை கையோடு எடுத்துச்சென்றுவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்த பிசிசிஐ இது தொடர்பாக ஐசிசியிடம் புகார் அளிக்க இருப்பதாக கூறியது.

Advertisement

இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிங் தலைவராக கோப்பையை நான் வெற்றி பெற்ற அணியிடம் வழங்க அதே நாளில் வழங்க தயாராக இருந்தேன். இப்போதும் கூட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அவர்கள் தான் என்னிடம் கோப்பை வாங்க முன் வரவில்லை. கோப்பையை வாங்க வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வாருங்கள். வந்து என்னிடம் கோப்பையை பெற்று விட்டு செல்லுங்கள். நான் இன்னும் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். நான் எந்த தவறையும் செய்யவில்லை.

இதனால் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை. பிசிசிஐயாக இருந்தாலும் சரி வேறு யாரிடமும் சரி மன்னிப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை, என தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News