தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் விவகாரத்தில் அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

 

Advertisement

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பொன்விழா நகரில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக பாஜ சார்பில் பூத் கமிட்டிகளை வலிமைப்படுத்தும் பணி சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசு நிதியுதவி உடன் அவிநாசி நான்கு வழிச்சாலை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. பிரதமர் மோடி 2014ல் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நாட்டின் வளர்ச்சி வேகத்தை நாம் பார்த்து கொண்டுள்ளோம். இதே போல் மேட்டுப்பாளையத்தில் பைபாஸ் சாலை அமைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆய்வு செய்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் நித்தின் கட்கரியிடம் பேசியுள்ளேன். விரைவில் அப்பணிகளும் துரிதமாக நடைபெறும்.

கரூர் துயர சம்பவம் குறித்து எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சம்பவ இடங்களில் ஆய்வு செய்து அதற்குரிய அறிக்கையை தேசிய தலைவர் மற்றும் அமைச்சர்களிடம் வழங்கியுள்ளனர்.அதன் விசாரணை அறிக்கை வெளிவரும் முன் இதுகுறித்து அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement