தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்குத் திருட்டுப் புகார் விமர்சனம் தலைமை தேர்தல் ஆணையரின் குடும்பத்தினர் மீது அவதூறு: ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம்

 

Advertisement

புதுடெல்லி: வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, கடந்த 18ம் தேதி பீகாரின் கயாவில் நடந்த கூட்டத்தில், ‘தற்போது மோடி அரசு ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ளது. விரைவில் பீகார் மற்றும் டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமையும் நாள் வரும்.

அப்போது, நாடு முழுவதும் வாக்குகளைத் திருடிய தேர்தல் ஆணையர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்’ என்று தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற இரண்டு ஆணையர்களையும் பகிரங்கமாக எச்சரித்தார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதன் விளைவாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது சமூக வலைதளங்களில் கடுமையான தனிப்பட்ட தாக்குதல்களும், கேலி கிண்டல்களும் தொடங்கின. ஞானேஷ் குமாரின் இரு மகள்கள், மருமகன்கள் மற்றும் அவரது இளைய சகோதரர் என அனைவரும் இந்திய வருவாய்த் துறையில் மூத்த அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர்.

ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதல்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த சங்கம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடத்தப்படும் தேவையற்ற விமர்சனங்களையும், தனிப்பட்ட தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய தாக்குதல்கள், அவர்களது அதிகாரப்பூர்வமான கடமைகளுடன் தொடர்பில்லாதவை. பொது சேவையில் கண்ணியத்தையும், நேர்மையையும் எப்போதும் நாங்கள் நிலைநிறுத்துவோம்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

 

Advertisement