தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் 11 பேரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு செயலாளரான சுன்சோங்கம் ஜடக் சிரு போக்குவரத்து துறை மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளராகவும்,

நிதித்துறை சிறப்புச் செயலாளரான பிரசாந்த் மு வடநெரே நிதித்துறை செலவினம் அரசுச் செயலாளராகவும், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரான ராஜகோபால் சுன்கரா நிதித்துறை அரசு இணைச் செயலாளராகவும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் இயக்குநரான தீபக் ஜேக்கப் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அருங்காட்சியகங்கள் இயக்குநரான கவிதா ராமு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் இயக்குநராகவும், மீனவளம் மற்றும் மீனவர் நல ஆணையரான கஜலட்சி போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராகவும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரான முரளீதரன் மீன்வளம் மற்றும் மீனவர் நலம் இயக்குநராகவும், குடிநீர் வடிகால் வாரியம் இயக்குநர் கிரண் குராலா வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராகவும்,

வீட்டுவசதி வாரிய இயக்குநரான சமீரன் குடிநீர் வடிகால் வாரிய இயக்குநராகவும், ஈரோடு வணிகவரி இணை ஆணையரான தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கோயம்புத்தூர் வணிக வரி இணை ஆணையராகவும், செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியரான நாராயண சர்மா சென்னை வணிக வரி இணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related News