தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக 5 பேருக்கு பதவி உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேருக்கு ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய ஆட்சிப் பணியில் பதவி உயர்வின் மூலம் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2023ம் ஆண்டுக்கான தேர்வுப் பட்டியலின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில சிவில் சேவையில் பணியாற்றி வந்த 5 அதிகாரிகள் இந்திய நிர்வாக சேவைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Advertisement

இந்த நியமனங்கள், இந்திய ஆட்சிப்பணி விதிகள், 1954ன் விதி 8(1), பதவி உயர்வின் மூலம் நியமனம் தொடர்பான ஒழுங்குமுறை மற்றும் பணியாற்றும் பயிற்சி விதிகள் ஆகிய 3 விதிகளின் அடிப்படையில் குடியரசு தலைவரால் வழங்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் ஆலோசனையுடன், 2023 ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை ஏற்பட்ட காலியிடங்களை நிரப்பும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கவிதா, சி.முத்துக்குமரன், பி.எஸ்.லீலா அலெக்ஸ், எம்.வீரப்பன் மற்றும் ஆர்.ரேவதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் அனைவரும் தமிழ்நாடு கேடரில் பணியாற்ற உள்ளனர். தற்போது, இவர்கள் “பயிற்சி காலத்தில்” பணியாற்றி வருவார்கள் எனவும், பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement