தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு: தமிழகத்தில் 650 பேர் தேர்ச்சி பெற்று சாதனை

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய அளவில் 14,627 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 650 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். மெயின் தேர்வு வரும் செப்டம்பர் 20ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1056 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த பிப்ரவரி 14ம் தேதி அறிவித்தது. இத்தேர்வை இந்தியா முழுவதும் 6 லட்சம் பேரும், குறிப்பாக தமிழகத்தில் 25 ஆயிரம் பேரும் எழுதினர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மாதம் 16ம் தேதி நடந்தது. இந்நிலையில் முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் www.upsc.gov.in, www.upsconline.nic.inல் ஆகிய இணையதளத்தில் நேற்று வெளியானது.
Advertisement

இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறுகையில், சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் 14,627 பேர், குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 650 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்கள் அகாடமியில் சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், டெல்லியில் பயின்ற 954 பேர் தேர்ச்சி பெற்றதில், தமிழகத்தில் மட்டும் 396 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்தகட்டமாக மெயின் தேர்வு செப்டம்பர் மாதம் 20ம் தேதி நடக்கிறது என்றார்.

கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் 16 நாட்களில் வெளியிடப்பட்டது. இந்தாண்டு 14 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல்நிலை தேர்வில் தமிழகத்தில் 700 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்தாண்டு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து 650 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisement