தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரம்: தமிழக அரசு உத்தரவுக்கு வேல்முருகன் வரவேற்பு

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காது என்றும், ஓஎன்ஜிசிக்கு வழங்கப்பட்ட அனுமதியைத் திரும்பப் பெற, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இது மக்கள் மனநிலையை பிரதிபலிக்கும் முடிவு மட்டுமல்ல. தமிழக நிலம், நீர், சுற்றுச்சூழல், மீன்வளம், எதிர்காலத் தலைமுறை, ஆகியவற்றை பாதுகாக்கும் நம்பிக்கையும் ஆகும்.

Advertisement

ஒன்றிணைந்த எதிர்ப்பின் வலிமையை உணர்ந்து, ஹைட்ரோகார்பன் திட்டங்களின் அனுமதியைத் திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கும் முடிவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளம் கனிந்து வரவேற்கிறது. அதோடு, அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவோடு, தமிழ்நாட்டின் எத்தகையப் பகுதியிலும், எத்தகையக் காலத்திலும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்கிறத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, அதனைத் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை முடிவாக அறிவிக்க வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement