தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரீல்ஸ் வீடியோ, கள்ளத் தொடர்பு சந்தேகத்தால் மனைவியை 17 துண்டாக வெட்டிக் கொன்ற கணவன்: கழிவுநீர் கால்வாயில் துண்டித்த தலை மீட்பு

தானே: மகாராஷ்டிராவில் ரீல்ஸ் வீடியோ, கள்ளத் தொடர்பு சந்தேகத்தால் மனைவியைக் கொன்று 17 துண்டுகளாக வெட்டிய கணவனை ஐந்து நாட்கள் நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு காவல்துறை கைது செய்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டம், பிவண்டியில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி கழிவுநீர் கால்வாயில் இருந்து பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று மீட்கப்பட்டது. கொலை நடந்த இடம், பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் என எந்தத் தடயமும் இல்லாததால், கொலையாளியைக் கண்டுபிடிப்பது காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்தது. இது தொடர்பாக போயிவாடா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலையை அடையாளத்திற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இரண்டு சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை அமைத்து கொலையாளியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

Advertisement

இந்த நிலையில், ஹனிஃபா கான் என்ற பெண், தனது மகள் முஸ்கானைக் காணவில்லை எனப் புகார் அளித்தார். மகளின் செல்போன் இரண்டு நாட்களாக அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், மருமகன் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார். காவல்துறையினர் கால்வாயில் கிடைத்த தலையின் புகைப்படத்தைக் காட்டியபோது, அது தனது மகள் முஸ்கான்தான் எனத் தாய் அடையாளம் காட்டினார். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் முஸ்கானின் கணவர் முகமது தாஹா அன்சாரியை (27) பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, மனைவியின் தலையைத் துண்டித்துக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், மனைவியின் உடலை 17 துண்டுகளாக வெட்டி, பிவண்டியின் வெவ்வேறு பகுதிகளில் வீசியதாகவும் அவர் அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தற்போது, பெண்ணின் மற்ற உடல் பாகங்களைத் தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கொலையான முஸ்கான், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டு வந்துள்ளார். மேலும் முஸ்கான் சில ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவரது நடவடிக்கை பிடிக்காததால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், ஆகஸ்ட் 29ம் தேதி மனைவியைக் கொலை செய்து, அவரது தலையைத் துண்டித்துள்ளார். பின்னர், தலையையும், உடலையும் தனித்தனியாகக் கால்வாயில் வீசியுள்ளார்.

நீண்ட விசாரணைக்கு பின்னர் முகமது தாஹா அன்சாரியை கைது செய்துள்ளோம். தற்போது படகுகள் உதவியுடன் முஸ்கானின் உடலைத் தேடும் பணி நடக்கிறது’ என்று கூறினர். கடந்த சில மாதங்களுக்கு முன் தனது லிவ் இன் காதலனால் பெண் ஒருவர் கொடூரமாக வெடிக் கொல்லப்பட்ட சம்பவம் போன்று மும்பையிலும் தற்போது நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News