தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கணவனை கொன்று வீட்டு வாசலில் புதைப்பு: 2 மகள்களுடன் மனைவி கைது

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மல்லாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு (55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (43). மகள்கள் தமிழ்செல்வி (25), சாரதா (20). மகாலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பழனிவேல் கண்டித்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் பழனிவேலு கடந்த மாதம் 8ம்தேதியில் இருந்து வீட்டுக்கு வரவில்லை. அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, கொழுப்பு கட்டிக்காக கோயமுத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதா மகாலட்சுமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், பழனிவேலுவின் சகோதரி காவேரி, கடந்த 27ம்தேதி நமணசமுத்திரம் போலீசில் அளித்த புகாரின்படி போலீசார் விசாரணையை தொடங்கினர்.

Advertisement

இதுதெரிந்து மாயமான மகாலட்சுமி, அவரது மகள்கள் தமிழ்ச்செல்வி, சாரதா ஆகியோரை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிராமத்தில் போலீசார் நேற்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கடந்த மாதம் 8ம்தேதி மகாலட்சுமிக்கும், பழனிவேலுக்கும் இடையே நடத்தையில் சந்தேகத்தால் தகராறு ஏற்படவே அவர் கட்டையால் தாக்கியதில் பழனிவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மகள்கள் உதவியுடன் உடலை வீட்டு வாசலில் குழி தோண்டி புதைத்துள்ளார் என தெரிய வந்தது. பின்னர் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பின் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தாய், 2 மகள்களை கைது செய்தனர்.

Advertisement

Related News