சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதிக்கு அரிவாள் வெட்டு: கணவர் உயிரிழப்பு
கோவில்பட்டி: சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதிக்கு அரிவாள் வெட்டு. இதில் கணவர் உயிரிழந்தார். நெற்கட்டும்சேவல் அருகே பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் - சுப்புத்தாய் தம்பதியை வழிமறித்து வெட்டியுள்ளனர். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த சங்கரலிங்கம் உயிரிழந்தார். சுப்புத்தாய் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிலத்தகராறில் உறவினர்களே சங்கரலிங்கத்தை கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement