தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனிதநேய ஜனநாயக கட்சியின் பதிவு ரத்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்டவிரோதம்: பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

சென்னை: மனிதநேய ஜனநாயக கட்சியின் பதிவு ரத்து செய்துள்ள தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிட்ட அறிக்கை: கடந்த 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

இந்த பட்டியலில் மனிதநேய ஜனநாயக கட்சியையும் இணைத்துள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் மனிதநேய ஜனநாயக கட்சி நேரடியாக போட்டியிடவில்லை. மாறாக, அனைத்து உள்ளாட்சி தேர்தல்களிலும் மஜக போட்டியிட்டது. மேலும், தமிழகத்தில் அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலும் மனிதநேய ஜனநாயக கட்சி ஈடுபட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் நிர்வாக கட்டமைப்போடும் மக்கள் செல்வாக்கோடும் இயங்கி வரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பதிவை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் செயல் கண்டனத்திற்குரியது. தேர்தலில் போட்டியிடவில்லை என்ற ஒரே காரணத்தைக் கொண்டு கட்சியின் பதிவை ரத்து அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு கிடையாது. எனவே, தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை சட்டரீதியாக எதிர்கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் பதிவை உறுதி செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement