தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலவரத்தை தூண்ட முயற்சி எச்.ராஜா மீது வழக்கு

 

Advertisement

திருப்புத்தூர்: மதுரை, திருப்பரங்குன்றம் மலை மீது வழக்கத்திற்காக மாறாக தர்கா அருகே உள்ள சர்வே கல்லில் கார்த்திகை தீபம் ஏற்றும்படி பாஜ, இந்து அமைப்பினர் பிரச்னை செய்து வருகின்றனர். பாஜ முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா இதற்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 4ம் தேதி திருப்பரங்குன்றம் செல்ல, சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே கும்மங்குடி பகுதியில் இருந்து புறப்பட்டார். அவரை திருப்புத்தூர் டிஎஸ்பி செல்வக்குமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எச்.ராஜா, தான் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்திற்கு டப்பிங் பேசுவதற்காக சென்று கொண்டிருப்பதாகவும், தன்னை விடுவிக்குமாறும் கூறினார். ஆனால் போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து நிறுத்துவதாக கூறினர். அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச்.ராஜா, தமிழக அரசு, அமைச்சர்கள், மதுரை கலெக்டர், காவல் ஆணையர் ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இதையடுத்து, எச்.ராஜா மற்றும் அவரது ஓட்டுநர் மீது பொதுவழி பாதையை மறித்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மதவாதத்தை தூண்டுவது போல பேசுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் இரவு நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement