தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 6வது இயலில் இருந்து கேள்விகள் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இயலில் உள்ள ‘பன்முகக் கலைஞர்’ பாடத்தை மாணவர்கள் முழுமையாகப் படித்துக் கொள்ள வேண்டும். 9 இயல்களில் உள்ள 45 ஒரு மதிப்பெண் வினா விடைகளைப் படித்தால் குறைந்தபட்சம் எட்டு மதிப்பெண்கள் பெற்று விட முடியும். அதுபோல மனப்பாடப் பாடல்களை நன்றாகப் படித்துக்கொண்டால் இரண்டு கட்டாய...

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 6வது இயலில் இருந்து கேள்விகள் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இயலில் உள்ள ‘பன்முகக் கலைஞர்’ பாடத்தை மாணவர்கள் முழுமையாகப் படித்துக் கொள்ள வேண்டும். 9 இயல்களில் உள்ள 45 ஒரு மதிப்பெண் வினா விடைகளைப் படித்தால் குறைந்தபட்சம் எட்டு மதிப்பெண்கள் பெற்று விட முடியும். அதுபோல மனப்பாடப் பாடல்களை நன்றாகப் படித்துக்கொண்டால் இரண்டு கட்டாய வினாக்களை எழுதிவிட முடியும்.

‘பள்ளியில் நான்’ ‘வீட்டில் நான்’ ‘மாணவர்கள் பின்பற்ற வேண்டிய அறங்கள்’ மற்றும் ‘நன்மைகள்’ போன்று சொந்தமாக விடை அளிக்கும் வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதற்கு மாணவர்கள் தங்கள் கோணத்தில் சொந்தமாக எழுதினால் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும். விடைக்கேற்ற வினா அமைத்தல், இரண்டு மதிப்பெண் வினாக்களில் கேட்கப்படுகிறது. மிகவும் எளிமையான பகுதியான இதனை மாணவர்கள் தவற விடக்கூடாது. கலைச்சொல் அறிவோம் பகுதியில் இருந்து இரண்டு ஆங்கிலச் சொற்கள் கொடுத்து தமிழில் மொழிபெயர்க சொல்லும் வினாக்கள் கட்டாயம் கேட்கப்படும். பத்தி கொடுத்து மூன்று கேள்விகள் கேட்கப்படும் வினாவும் மிக எளிமையானது. காட்சியை கொடுத்து கவிதை எழுதும் பகுதியைச் சற்று முயற்சி செய்து சிறப்பாக எழுதினால் ஐந்து மதிப்பெண்கள் நமக்கு எளிமையாக கிடைத்துவிடும்.

தமிழ்ப் பாடத்தைப் பொறுத்தவரை சொந்தமாக விடையளிப்பதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதால் கவிதை எழுதுவது, கட்டுரை எழுதுவது, ஆகியவற்றை பலமுறை பயிற்சி எடுத்துக்கொள்வது அவசியம். நூலக உறுப்பினர் படிவம், மேல்நிலைச் சேர்க்கை விண்ணப்பப்படிவம், பணி வாய்ப்பு வேண்டி தன் விவரப்பட்டியல், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினர் சேர்க்கைப் படிவம் ஆகிய நான்கில் ஒன்று வரவாய்ப்புள்ளது. இவற்றில் அதிக பயிற்சி எடுத்துக் கொண்டால் அதிக மதிப்பெண்கள் பெறலாம். வாழ்த்துக்கள்!

Related News