தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏமனில் ஹவுதி குழு மீது இஸ்ரேல் தாக்குதல்; 46 பேர் பலி

ஏடன்: ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ஹமாஸ் போர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் இன்னும் நீடிக்கிறது. ஹமாஸ் படையினருக்கு ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானின் ஹிஸ்புல்லா படையினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் இஸ்ரேல் மீதும் டிரோன்கள், ஏவுகணைகளை வீசி ஹவுதி படை தாக்குதல் நடத்துவதும், இஸ்ரேல் பதிலடி கொடுப்பதும் நீடிக்கிறது.

Advertisement

அதன்ஒரு பகுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை(9ம் தேதி) இஸ்ரேல் மீது ஹவுதி டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் இஸ்ரேலின் கடும் வான்பாதுகாப்பு தடுப்புகளை மீறி, தெற்கு இஸ்ரேலிய விமான நிலையத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் விமான நிலைய கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கி ஒருவர் காயமடைந்தார். ஹவுதியின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் கடும் பதிலடி கொடுத்துள்ளது.

கடந்த புதன்கிழமை(10ம் தேதி) ஏமன் தலைநகர் சானாவில் உள்ள ஹவுதிகளின் ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. ஆனால் குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் தாக்கியதாக ஹவுதி குற்றம்சாட்டி உள்ளது. இந்த தாக்குதலில் 5 குழந்தைகள், 11 பெண்கள் மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர்கள் 11 பேர் உள்பட 46 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 165க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Related News