தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டுமனை பட்டா கோரி கலெக்டரிடம் மனு

திருவள்ளூர்: செஞ்சி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வாழ்ந்து வரும் 18 குடும்பத்துக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கடம்பத்தூர் ஒன்றியம், செஞ்சி கிராமத்தில் ஈஸ்வரன் கோயில் தெருவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 18 குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி வாழ்ந்து வருகின்றனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயக் கூலித் தொழில் செய்யும் இவர்கள் கட்டி இருக்கும் வீட்டிற்கு இதுவரை பட்டா வழங்கவில்லை.
Advertisement

மேலும் இவர்கள் கட்டி இருக்கும் வீடுகள், ஈஸ்வரன் கோயிலுக்குச் சொந்தம் என்றும், இந்த வீடுகளை இந்து சமய அறநிலையத்துறை அப்புறப்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வாழ்ந்து வரும் இவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் கலெக்டர் த.பிரபு சங்கரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisement