தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டு மனை முறைகேடு: லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதிப்பு

சென்னை: கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சேலத்தில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மூலம் உருவாக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பான சிறப்பு தணிக்கைக் குழு அறிக்கை அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. விசாரணையின் அடிப்படையில், எலவமலை கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் முறைகேடு நடந்ததாக பதிவாளர் உள்பட 14 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பதிவாளர் ஏ டி பாஸ்கரன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முறைகேடுகளுக்கு முகாந்திரம் உள்ளது என சிறப்பு தணிக்கை குழு அறிக்கை அளித்ததால் விசாரணைக்கு உத்தரவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதை இறுதி நடவடிக்கையாக கருதக் கூடாது என கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கவனித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் விரிவான விசாரணைக்காக அக்டோபர்.15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
Advertisement

Advertisement

Related News