தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டுமனை பிரச்னையில் முன்விரோதம்: பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்: வலைதளங்களில் வீடியோ வைரல்

பண்ருட்டி: பெண்ணின் மேலாடைகளை அவிழ்த்து மரத்தில் கட்டி வைத்து உறவினர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லித்தோப்பு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமர்(63), கூலி தொழிலாளி. இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த உறவினர்களான வைத்தீஸ்வரன், சின்னையாள், ஜெயந்தி, அனுராதா ஆகியோருக்கும் இடையே வீட்டுமனை சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் சம்பவத்தன்று நெல்லித்தோப்பு ஓடை பகுதியில் நடந்து சென்ற ராமரை வழிமறித்து, வைத்தீஸ்வரன், சின்னையாள், ஜெயந்தி, அனுராதா ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் ராமரின் தம்பி சிங்காரவேல் மனைவி செல்வராணியின் மேலாடைகளை களைந்து மரத்தில் கட்டி வைத்து, உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராமர் மற்றும் செல்வராணி ஆகியோர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து காடாம்புலியூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன், சின்னையாள், ஜெயந்தி, அனுராதா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அனுராதாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான வைத்தீஸ்வரன், சின்னையாள், ஜெயந்தி ஆகியோரை தேடி வருகின்றனர். இதற்கிடையில் ஆடைகளை களைந்து பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement