தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயிலுக்கு சொந்தமான இடம் எனக் கூறி உக்கடத்தில் 13 வீடுகள் இடித்து அகற்றம்: அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

கோவை: கோவை உக்கடம் நரசிம்மர் கோயில் அருகே வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இதன் அருகே 13 வீடுகள் உள்ளன. இதில் 9 வீட்டில் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த குடியிருப்புகள் கோயிலுக்கு சொந்தமான இடம் என்பதால் வீடுகளை காலி செய்ய ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்து இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்தனர்.

Advertisement

இந்த நிலையில் இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் வீடுகளை இடிக்க முயன்றனர். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இடிக்கக்கூடாது என்று கூறினர். ஆனால் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.

தொடர்ந்து அந்த வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வீட்டை இடிப்பது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 13 வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றினர். வீடுகள் அகற்றப்பட்ட சம்பவத்தால் உக்கடத்தில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Advertisement

Related News