தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏராளமான வீடு, கடைகளை கட்டி புழல் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு

புழல்: சென்னை சோழவரம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரானது, ஏரியின் மதகு அருகில் உள்ள கால்வாய் வழியாக நல்லூர், விஜயநல்லூர், ஆட்டந்தாங்கல், பாலகணேசன் நகர், எம்ஜிஆர்.நகர் மற்றும் ராஜாங்கம் நகர் வழியாக சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு சென்று திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை ஆலமரம் பகுதி வழியாக புழல் ஏரிக்கு செல்கிறது. இந்த கால்வாயின் 2 பக்கங்களிலும் பல இடங்களில் வீடு, கடைகள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
Advertisement

இதனால் வீடு, கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்கள் அனைத்தும் கால்வாயில் கலந்துவிடுகிறது.மேலும் இந்த பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை மறைமுகமாக பூமிக்கு அடியில் பைப் வைத்து புழல் ஏரி கால்வாயில் விடுகின்றனர். தற்போது கால்வாயில் ஆகாய தாமரைகள் வளர்ந்துள்ளதாலும் தண்ணீர் மாசுபட்டு வருகிறது.

‘’இதுசம்பந்தமாக பலமுறை செங்குன்றத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதே நிலைமை நீடித்தால் குடிநீர் மாசு ஏற்பட்டு புழல் ஏரி கழிவுநீராக மாறிவிடும் சூழ்நிலை ஏற்படும். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உபரி கால்வாய் ஆய்வு செய்து கால்வாயில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி கரைகளின் இரண்டு பக்கங்களிலும் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்’’ என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Advertisement

Related News