தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது வெண்கல முருகன் சிலை கண்டெடுப்பு

ஜோலார்பேட்டை: வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது வெண்கலத்தால் ஆன முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதியினர் கற்பூரம் ஏற்றி முருகனை தரிசனம் செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா புதுப்பேட்டை அன்னசாகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி ருக்குமணி. இவர்கள் தனது வீட்டருகே உள்ள நிலத்தில் வீடு கட்ட முடிவு செய்தனர். இதற்காக நேற்று கட்டிட தொழிலாளர்கள் அஸ்திவாரம் போடுவதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். சிறிது ஆழம் தோண்டியபோது அரை அடி உயரமுள்ள வெண்கலத்தால் ஆன முருகர் சிலை இருப்பதை கண்டு ருக்குமணி மற்றும் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

இதையறிந்த அப்பகுதியினர் ஏராளமானோர் வந்து முருகர் சிலையை தரிசனம் செய்தனர். மேலும் சிலர் கற்பூரம் ஏற்றி பக்தி பரவசத்துடன் வணங்கினர்.

இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் காஞ்சனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதையடுத்து போலீசார், ருக்குமணியிடம் இருந்த முருகர் சிலையை மீட்டு தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். இந்த சிலை எவ்வளவு ஆண்டுகள் பழமையானது என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பின்னர்தான் தெரிய வரும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் முருகன்சிலை கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News