தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூர் தனியார் பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த ஆண் நண்பர் சிக்கினார்: டெல்லியில் சுற்றிவளைப்பு

ஓசூர்: ஓசூர் அருகே தனியார் பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த முக்கிய குற்றவாளியை டெல்லியில் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வன்னியபுரத்தில் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், பெண் ஊழியர்களுக்காக லாலிக்கல் பகுதியில் தொழிற்சாலை சார்பில் அடுக்குமாடி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 6,250 ஊழியர்கள் தங்கி உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் அங்குள்ள ஒரு அறையில் இருந்த குளியலறையில் ரகசிய கேமரா இருந்ததை ஊழியர் ஒருவர் கண்டுபிடித்தார். இதையடுத்து, கடந்த 4ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 3 நாட்கள் தொடர்ச்சியாக பெண் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரித்ததில், ரகசிய கேமரா பொருத்தியது அதே விடுதியில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா (22) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், உறவினரும், நண்பருமான ரவி பிரதாப்சிங் (29) என்பவர் கேமரா வைக்க சொன்னதாக கூறினார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் பெங்களூருவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தப்பி ஓடினார்.

இதையடுத்து, தனிப்படை போலீசார் விமானம் மூலம் சென்று தேடினர். இதனிடையே ரவி பிரதாப்சிங் டெல்லியில் பதுங்கியிருப்பதாக தகவலறிந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று நேற்று முன்தினம் இரவு அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக நேற்று அதிகாலை பெங்களூருக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து உத்தனப்பள்ளி காவல் நிலையத்திற்கு நேற்று காலை ரவிபிரதாப்சிங்கை அழைத்து வந்தனர். அங்கு, எஸ்பி தங்கதுரை தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கேமராவை எதற்காக பொருத்தினார். அதை இயக்க கூடிய டிவைஸ் எங்கு வைக்கப்பட்டது. அதன் மூலம் வீடியோக்கள் எதுவும் எடுக்கப்பட்டதா? யாருக்காவது பகிரப்பட்டதா என தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு இயல்பு நிலைக்கு திரும்பினர்.

Advertisement