தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூர் அருகே சிப்காட் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

Advertisement

ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில் ஜூஜூவாடி சிப்காட் பேஸ் ஒன்றில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ஆண்டு கணக்கில் நடந்து வரும் பணியால் வாரத்தின் இறுதி நாள், பீக் அவர்ஸ் எனப்படும் காலை, மாலை நேரங்களில் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் சாலையாக உள்ளது. இந்த சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்ல பல மணி நேரமாகும்.

இந்நிலையில், நேற்று அத்திப்பள்ளி மாநில எல்லை பகுதியிலிருந்து ஓசூர் வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபக்கமும் கனரக வாகனங்கள், கார், ஜீப், இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.

அதேபோல ஆம்புலன்ஸ் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் போலீசார் கடும் சிரமத்திற்கு இடையே ஆம்புலன்சை மீட்டு அனுப்பி வைத்தனர். தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இந்த சாலையில் நடந்து வரும் மேம்பால பணியை துரிதப்படுத்தி விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News