ஒசூரில் ரூ.138 கோடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு ரிங் ரோடு அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்..!!
ஓசூர்: ஒசூரில் ரூ.138 கோடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு ரிங் ரோடு அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ஒசூர் புதிய பேருந்து நிலையம் அருகே துவங்கி ஜெனாபெண்டா வரை 6 கி.மீ. தூரத்துக்கு ரிங் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.138 கோடியில் ரிங் ரோடு அமைக்க நெடுஞ்சாலைத் துறை கருத்துரு தயார் செய்து ஆட்சியருக்கு அனுப்பி உள்ளது.
Advertisement
Advertisement