தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூர் அருகே பத்தலப்பள்ளியில் சீரான போக்குவரத்துக்கு வாகனங்களை தனியாக பிரித்து அனுப்ப நடவடிக்கை

*வாகன ஓட்டிகள் கோரிக்கை

Advertisement

ஓசூர் : ஓசூர் அருகே பத்தலப்பள்ளி பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கனரக வாகனங்களையும், இலகுராக வாகனங்களையும் பிரித்து அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்பவர்கள், கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் தொழில் முனைவோர்கள், அதிகாரிகள் செல்லும் இலகுராக வாகனங்கள், கனரக வாகனங்கள் சீதாராம் மேட்டுப்பகுதியில் ஒன்றாக இணைந்து செல்கின்றன.

இலகுராக வாகன ஓட்டிகள், கனரக வாகனங்கள் ஒன்றாக செல்லும்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்க பெங்களூரு- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையான பத்தலப்பள்ளியில் இலகுரக வாகனங்களை ஒரு சாலையிலும், கனரக வாகனங்களை இருபுறம் உள்ள சாலைகளிலும் செல்ல அனுமதிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுளுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஓசூர் பழைய நகராட்சி எதிரில் உள்ள மேம்பாலத்தில் இணைப்பு பகுதியின் பாட் பேரிங் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், வாகனங்கள் சர்வீஸ் சாலை, ரிங்ரோடு வழியாக செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில், சீதாராம் மேட்டு பகுதியில் அதிகாலை, மாலை நேரத்தில் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பத்தலப்பள்ளி அருகே இலகுரக வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சாலையில் பிரித்து அனுப்ப வேண்டும்.

சீதாராம் மேட்டுப்பகுதியில், அதிகாலை நேரத்தில் வாகன நேரிசல் ஏற்படும்போது தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி -கல்லூரிகளின் வாகனங்கள் நெரிச்சலில் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது. எனவே, பத்தலபள்ளி அருகே கனரக வாகனங்களையும், இலகுராக வாகனங்களையும் பிரித்து அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement