தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் 7 கார்கள், 3 லாரிகள், பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து: ஒருவர் பலி: 10 பேர் படுகாயம்

Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மாலை 4 மணி அளவில், கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற சரக்கு லாரி மீது மோதியது. இதில் அந்த லாரி மற்றொரு லாரி மீது ேமாதியது. அது மற்றொரு லாரி மீது மோதியது. தேசிய நெடுஞ்சாலை என்பதால், கார்கள் மற்றும் அரசு பஸ் என அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியது. இதில் 7 கார்கள், 3 லாரிகள், ஒரு அரசு பஸ் விபத்தில் சிக்கின. இதில் 5 கார்கள் அப்பளம் போல் நொறுங்கியது. 2 கார்களின் பின்பகுதி சேதமானது.

மேலும், 2 லாரிகளின் முன்பகுதி கண்ணாடி மற்றும் விளக்குகள் உடைந்து நொறுங்கின. அதே போல், அரசு பஸ்சின் முன் பகுதி பலத்த சேதமானது. விபத்து நடந்த பகுதியில், சாலை முழுவதும் கண்ணாடிகள் உடைந்து கிடந்தன. இதில் ஒரே காரில் சென்ற கோவையை சேர்ந்த ஆயில் மில் அதிபர் வெங்கடேஷ் (33), அவரது நண்பர் அரவிந்த் (30), ஊழியர்கள் தஞ்சாவூரை சேர்ந்த துரை (24), பழனியை சேர்ந்த கார்த்திக்ராஜா (26) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

மற்றொரு காரில் சென்ற கிருஷ்ணகிரியை சேர்ந்த வேல்விழி(65), அவரது மகன் பூபேஷ், டிரைவர் ரவி(55) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். மொத்தம் 10 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், டிரைவர் ரவி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement