தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூரில் ரூ.5 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 4 பேர் சிறையில் அடைப்பு: பெண் உள்பட 3 பேருக்கு வலை

ஓசூர்: ஓசூர் அருகே, ரூ.5 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய வழக்கில் கைதான 4பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் உள்பட 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியைச் சேர்ந்தவர் சீதாராமன்(34). திமுக உறுப்பினரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம், இவரை பெண் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு வீட்டுமனை வேண்டுமென கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் தனது காரில் சூளகிரியிலிருந்து பத்தளப்பள்ளிக்கு புறப்பட்டார். அப்போது அவரை மடக்கிய ஒரு கும்பல், அவரின் காரிலேயே கடத்திச் சென்று, ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டியது. மேலும், சீதாராமனிடம் செல்போனை கொடுத்து தெரிந்த நபர்களிடம் பணம் பெற்றுத் தருமாறு கேட்டு கட்டாயப்படுத்தினர். சீதாராமனும் தனக்கு தெரிந்தவர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார். அப்போது, கடத்தல் கும்பலுக்கு தெரியாமல், தனது லொகேஷனை ஷேர் செய்துள்ளார்.

Advertisement

இதன் மூலம், அவர் கடத்தப்பட்டதை அறிந்த உறவினர்கள், ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் சீதாராமன் அனுப்பிய லொகேஷன் மூலம், இருப்பிடத்தை கண்டறிந்து கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். போலீசார் வருவதை கண்ட கும்பல் காரில் தப்ப முயன்றது. அவர்களை அட்கோ மற்றும் டவுன் போலீசார் நாலாபக்கமும் சுற்றி வளைத்து சங்கர் (38), சுரேஷ்(40), அஜய்(19), கோகுலகண்ணன்(23) ஆகியோரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து 4 பேரிடம் விசாரணை நடத்தியதில், 8 பேர் கொண்ட கும்பல் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், இதுதான் அவர்களின் முதல் கடத்தல் என்பதும் தெரிய வந்தது. 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மோகன், நாகராஜ் மற்றொரு மோகன், ஸ்வேதா என்ற பெண் ஆகிய 4பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Related News