தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூர் அருகே விடுதி குளியல் அறையில் ரகசிய கேமராக்கள்; தனியார் கம்பெனி பெண் தொழிலாளர்கள் போராட்டம்: பீகாரைச் சேர்ந்த பெண் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயக்கோட்டை அடுத்த வன்னியபுரம் கிராமத்தில் ஐபோன் உதிரிபாகங்கள் தயார் செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வரும் 6000 நிரந்தர பெண் தொழிலாளர்களுக்கு லாலிக்கல் என்ற இடத்தில் விடுதி கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு பெண் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் விடுதியின் 8வது பிளாக்கில் உள்ள குளியல் அறைகளில் ரகசிய கேமராக்கள் வைத்து பெண் தொழிலாளர்கள் குளிப்பதை படம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து பெண் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நேற்றிரவு விடுதியில் தங்கியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விடுதி முன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து ஓசூர் சப் கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, மாவட்ட எஸ்பி தங்கதுரை மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் சமாதானமடைந்த பெண்கள் கலைந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த பீகாரைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நீலு குமாரி குப்தா (23) ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை, அவரின் நண்பரான சதீஷ் குமார் என்பவருக்கும் பகிர்ந்துள்ளதால், அவரையும் கைது செய்ய போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.

Advertisement

Related News