தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூர் அருகே நாய் கடித்து 3ம் வகுப்பு மாணவன் படுகாயம்

Advertisement

*40 தையல் போட்டு சிகிச்சை

தொடரும் தொல்லையால் பீதி

ஓசூர் : ஓசூர் அருகே நாய் கடித்து 3ம் வகுப்பு மாணவன் படுகாயமடைந்தான். 40 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் தாசனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். கட்டிட தொழிலாளியான இவரது மனைவி மம்தா. இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

இதில், 2வது மகன் ராம்சரண்(8), அங்குள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய ராம்சரண், பக்கத்து வீட்டு சிறுவனோடு சேர்ந்து அப்பகுதியில் விளையாட சென்றுள்ளான். அப்போது, அங்குள்ள ஒரு கோழிப்பண்ணையில் இருந்து வெளியே வந்த நாய் ஒன்று சிறுவர்கள் இருவரையும் துரத்தி உள்ளது.

இதில், ராம்சரண் சிக்கிக் கொண்டான். அந்த நாய் சிறுவனின் தலை, முதுகு, காது, மூக்கு, கன்னம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடித்து குதறியது. இதில், சிறுவனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அதிகமாக ரத்தமும் வெளி யேறியது.

அலறல் சத்தம் கேட்டு சென்ற அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டனர். தொடர்ந்து கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெற்றோர் சிறுவனை ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு 40 இடங்களில் தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல ஓசூர் தர்கா பகுதியை சேர்ந்த தனியார் வங்கியில் வேலை பார்த்து வரும் முத்துலட்சுமி (25) என்பவர், ஓசூர் தேர்பேட்டை பகுதியில் டூவீலரில் சென்றபோது அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று அவரை துரத்தி துரத்தி கடித்துள்ளது. இதில், அவருக்கு காலில் காயங்கள் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓசூர் அருகே தின்னூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் எட்வின் பிரியன் என்பவரை நாய் கடித்ததில் உரிய சிகிச்சை பெறாததால் 2 மாதம் காலத்திற்கு பின்பு நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தார். ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement