தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குண்டு குழியுமாக மாறிப்போன ஓசூர்- பாகலூர் நெடுஞ்சாலை: சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்திட மக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி: ஓசூர் பாகலூர் சாலையில் நாள்தோறும் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளதாக வாகன ஒட்டிகள் சாலை சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர். ஓசூர் மாநகராட்சி அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலங்கள் பாகலூர் தேசிய நெடுஞ்சாலை செயல்பட்டு வருகின்றன. குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள் அதிகமுள்ள இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். ஆனால் இந்த சாலை குண்டு குழியுமாக மோசமாக உள்ளது.

இந்த சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீரமைப்புப் பணிகள் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த மே மாதம் தொடங்கின. 3 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என ஒப்பந்தம் போட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. சாலையும் ஒருவழி மாற்றப்பட்டுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

இதனால் வேலைக்கு செல்வோர், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதோடு சாலைகள் இருபுறங்களிலும் உள்ள கடைகளில் வணிகமும் பாதிக்கப்பட்டு உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். பழுதடைந்த பாகலூர் சாலையை விரைந்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே ஓசூர் நகர் மக்களின் கோரிக்கையாகியுள்ளது.