தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூர் அருகே நடைபயிற்சி சென்றவர்கள் மீது மோதிய கார்: தாய்,மகன் பலி

ஓசூர்: ஓசூர் அருகே நடைபயிற்சி சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓசூர் அருகே நல்லக்கானகோத்தபள்ளி என்ற இடத்தில் வசித்து வந்தவர் ஸ்வீதா பானு இவரது மகன் 15 வயதுள்ள சமீர். இருவரும் தினந்தோறும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதி சாலை ஓரத்தில் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Advertisement

இந்த நிலையில், இன்றைய தினம் நல்லக்கானகோத்தபள்ளி அட்டகுறுக்கி பகுதிக்கு இடையிலான சாலை ஓரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் கிரிஷ்ணகிரியிலிருந்து கேரளாவை சேர்ந்தவர் அவரது குடும்பத்தினருடன் ஓசூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் எதிர்பாராதவிதமாக சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த தாய், மகன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். விபத்துக் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீசார் உடனடியாக இருவரது உடலை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே போல் காயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News