தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலைத் துறையினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

மதுரை : உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலைத்துறை அலுவலக சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் 1979ல் தனித்துறையாக தோட்டக்கலைத்துறை உருவாக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில் உழவர்கள் அலுவலக தொடர்பு 2.0 திட்டத்தின் கீழ் (யுஏடிடி) உதவி தோட்டக்கலைத் துறை அலுவலர்களை மீண்டும் வேளாண் துறையின் கீழ் கொண்டு வருவதை கண்டித்து, தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துறைகளின் கீழ் தனித்தனியாக அலுவலர்கள் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

கடந்த 2023ம் ஆண்டு உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தோட்டக்கலைத் துறையில் இணைத்து ஒரு ஏஏச்ஓ தலைமையில் அதிகாரிகள் ‌அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் நான்கு கிராமங்களில் நெல், கரும்பு, வாழை, காய்கறி, பயிர் பசுமை குடில்களை கண்காணிக்கின்றனர். இதனுடன் வேளாண் பொறியியல் வேளாண் வணிகத்துறை செயல்படுத்தும் திட்டங்களையும் கண்காணித்து வருகின்றனர்.

இதன்படி தோட்டக்கலைத் துறையில் பணியாற்றி வருவோர், தற்போது வேளாண்துறைக்கு மாற்றம் செய்யப்படுவது முறையல்ல. எனவே 2.0 திட்டத்தை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Related News