தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஹார்மோன் ஊசி போட்டு வங்கதேச சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 200 பேர்: 3 மாதங்களில் அரங்கேறிய கொடூரம்

புனே: பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட வங்கதேச சிறுமி, தான் 3 மாதங்களில் 200க்கும் அதிகமானவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய் அருகே உள்ள நைகாவ் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 14 வயது சிறுமி உள்பட 5 பெண்கள் மீட்கப்பட்டனர் மற்றும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் மீட்கப்பட்ட 5 பேரில் சிறுமி உள்பட 3 பேர் வங்கதேசத்தை சேர்தவர்கள் என தெரிய வந்தது. அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், கடந்த 3 மாதங்களில் தன்னை 200க்கும் அதிகமான நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த சிறுமி பள்ளி தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். பின்னர் அவருக்கு அறிமுகமான பெண் ஒருவர் சிறுமியை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் தொழில் நடத்துபவர்களிடம் விற்றுள்ளார்.

இதனையடுத்து முதலில் சிறுமி குஜராத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளியுள்ளனர். அப்போது சிறுமி வயது முதிர்ச்சியடைந்தவராக காட்டுவதற்காக ஹார்மோன் ஊசிகளைச் செலுத்தியுள்ளனர். மேலும், மயக்க மருந்துகளைக் கொடுத்து, உடம்பில் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். பின்னர் சிறுமி கர்நாடகா, மகாராஷ்டிராவில் புனே, நவிமும்பை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கடந்த 3 மாதங்களில் சிறுமியை 200க்கும் மேற்பட்டோர் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.