தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆணவ கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை அரசு இயற்ற திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒன்றிய, மாநில அரசுகள் ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று நடந்தது. கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் இயங்கும் சிறப்பு புலனாய்வு குழு, கவின் படுகொலை வழக்கை விசாரிக்க வேண்டும்.

ஆணவப் படுகொலைக்கு எதிராக ஒன்றிய அரசு தான் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தினாலும் கூட தமிழ்நாடு அரசுக்கும் அதிகாரம் உள்ளது. உங்களுக்கான அதிகாரத்தை பயன்படுத்தி ஆணவக் கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடி இயற்ற வேண்டும்.

ராஜஸ்தான் மாநிலத்திலேயே சாதி ஆணவக் கொலையை தடுக்க சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றால் முற்போக்கு அரசியலை பேசும் தமிழ் மண்ணிலும் ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டம் தேவை. இந்திய ஒன்றிய அரசு தான் தேசிய அளவில் ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். ஆனால் மாநில அரசுக்கும் அதிகாரம் இருக்கும் சூழலில் வேடிக்கை பார்க்க வேண்டாம். மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி துணிந்து இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

Related News