ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பு
06:44 PM Jul 22, 2025 IST
Share
Advertisement
டெல்லி: ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் துணை மின் உற்பத்தி கருவியில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தில் தீப்பிடித்தவுடன் அணைக்கப்பட்ட நிலையில் பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தீப்பிடித்ததில் விமானத்தில் சில பகுதிகள் சேதம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.