தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டில் தூங்கும்போது ஏசி தீப்பிடித்து எரிந்து தொழிலாளி கருகி பலி

Advertisement

செய்யாறு: வீட்டில் தூங்கும்போது நள்ளிரவில் ஏசி தீப்பிடித்து எரிந்து தொழிலாளி கருகி பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் வெங்கட்ராயன்பேட்டையை சேர்ந்தவர் காமராஜ்(60), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தி(58). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவர் காமராஜூடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தி, கூழமந்தல் கிராமத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு மகன், மகளுடன் சென்றுவிட்டார். இதனால், காமராஜ் உறவினர் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அவருக்கு உதவியாக பேரன் வினோத்குமார் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு போதையில் வீட்டிற்கு வந்த காமராஜ், தனது அறையில் ஏசியை ஆன் செய்து விட்டு தூங்கியுள்ளார். வேலைக்கு சென்றிருந்த பேரன் வினோத்குமார் நள்ளிரவு 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது, காமராஜ் தங்கியிருந்த அறையில் இருந்து கரும்புகை வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், மின்சாரத்தை துண்டித்து விட்டு அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது, ஏசி தீப்பிடித்து எரிந்து, மெத்தை மீது விழுந்து தீப்பிடித்ததில், காமராஜ் தீயில் கருகி சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement