தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்காதலியுடன் வீட்டிற்கு வந்த கணவன் காதல் மனைவி விஷம் குடித்து தற்கொலை

*ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு

Advertisement

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சி, சின்ன கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்பாண்டி(38), லாரி டிரைவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த அம்மு(30) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், அருள்பாண்டிக்கும், அம்முவின் நெருங்கிய உறவினர் ஒருவரது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் கண்டித்து வந்துள்ளனர். ஆனாலும், கள்ளக்காதலியை கைவிட மறுத்த அருள்பாண்டி, யாருக்கும் தெரியாமல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டு ரகசியமாக வாழ்ந்து வந்தாராம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அருள்பாண்டி தனது கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து, தனது மனைவி அம்முவிடம் `இனிமேல் இவர் என்னுடன் தான் வாழ்வார்’ என கூறினாராம். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், மனவேதனை அடைந்த அம்மு வீட்டில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அம்முவின் தாயார் ஆனந்தி கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிந்து, தற்கொலைக்கு காரணமான கணவன் அருண்பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான கள்ளக்காதலியை தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News