இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளை போற்றி வணங்குகிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
Advertisement
சென்னை: தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளை போற்றி வணங்குகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே... ஆனால் அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.
Advertisement